×

வேதாரண்யத்தில் போதை மறுவாழ்வு மையத்தில் கொலை; 4 பேர் மீது வழக்குப்பதிவு..!!

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் போதை மறுவாழ்வு மையத்தில் முருகேசன் கொலை தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மறுவாழ்வு மைய நிர்வாகி மணிகண்டன், மேலாளர் வேல்முருகன், ஊழியர்கள் சாம்சுந்தர், தீபக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மையத்தில் இருந்து தப்பிக்க முயன்ற நால்வரை பிடித்து கட்டி வைத்து அடித்ததில் முருகேசன் மரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

The post வேதாரண்யத்தில் போதை மறுவாழ்வு மையத்தில் கொலை; 4 பேர் மீது வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Rehabilitation Center ,Vedarilayam ,Nagai ,Murugesan ,Nagai District ,Vedarnayya ,Addiction Rehabilitation Center ,Vedaryam ,
× RELATED நாகையில் குடிநீர் வழங்காததைக்...